Thursday 19 June 2014

அன்பென்பது யாதென தேடி ....


அன்பென்பது யாதென கேட்டேன் ...

அழகென்றனர்-சில நேரங்களில்
சிதைந்து அழிவதையரியாமல்

மலரென்றனர்-மலர்ந்ததும்
உதிர்ந்து சருகாவதை உணராமல் 

தெய்வமென்றனர் -கற்சிலையாய்
பல நேரங்களில் இருப்பதையறியாமல் 

அமுதென்றனர் -நஞ்சாய்
சில நேரங்களில் மாறுமென அறியாமல் 

உண்மை என்றனர்-பொய்மையில்
பல நேரம் கரைவ தரியாமல் 

இசையென்றனர்- பல நேரங்களில்
தாளம் தப்பி போவதையரியாமல் 

அலைந்து அறிந்து உணர்ந்த போது
வியந்து நின்றேன்

அன்பு அழகு தான் மழலையின் அழகு நடையில் !!
அன்பு மலர் தான் மழலையின் ஸ்பரிசத்தில் !!
அன்பு தெய்வம் தான் மழலையின் கனிந்த பார்வையில் !!
அன்பு அமுதம் தான் மழலை வாய் நன்னீரில் !!
அன்பு உண்மை தான் மழலையின் புன்சிரிப்பில் !!
அன்பு இசைதான் மழலையின் மொழியில்!!!


2 comments: