Thursday 19 June 2014

அமைதி ...


அமைதி ...
கூச்சல்களின் சமாதி இல்லை
மனதில் ஒலித்திடும் ஓம்கார நாதம் !!

அடரிருளின் நிசப்தம் இல்லை
இதயத்தில் தோன்றும் நிலவின் உதயம் !!

மனதின் சப்தங்கள் அடங்கும் வேளையில்
அமைதிப் பூக்கள் மலர்கிறது !!

போர்தொடுக்கும் கைகள் -என்று
பூக்களைத் தொடுக்கின்றதோ ...
அன்று விளையும்
மழலையின் சிரிப்பென
அனைவரின் மனங்களிலும் அமைதி!!


2 comments:

  1. அமைதியாய் ரசிக்க முடிந்தது.. அருமை

    ReplyDelete