Monday 30 June 2014

சொல்காய்ச்சி வனம்!!!


சொல்காய்ச்சி மரமாகி விட்டது மனம் ....

உதிரும் சொல்
விழுந்த இடமெல்லாம்
மரங்களாய் மனம்...

துளிர்த்து ...
கிளைத்து....
உதிர்ந்து....

மனங்கள் ( மரங்கள்) பெருகி
வெளிவர வழியறியா
எல்லையற்ற பெருவனமாய் நான் ...

தவிப்பின் உச்சத்தில்
மௌனம் பேசப் பழகுகிறது உதடுகள்

சிக்கி முக்கியாய் நினைவுகள் உரசிக்கொள்ள
வெந்து தணிகிறது மனக் காடு .!!



1 comment:

  1. மனசாட்சி இருக்கும் பலரும் அப்படித்தான். உங்களால் வார்த்தைகளாக்க முடிகிறது. எங்களால் இயலவில்லை. அருமையான வார்த்தைக்கோர்வை.

    ReplyDelete