Tuesday 17 June 2014

மழலையின் அணைப்பில் ...


தான் பெறாத ஒரு அரவணைப்பை
தன் சிசுவாய் போற்றிய
பொம்மைக்கு தந்தபடி
உறங்கிகொண்டிருந்தது அம்மழலை

குழந்தையின் அரவணைப்பை
வரமாய் கேட்க தவமிருந்து
தோன்றினர் கடவுளர்

காத்திருந்த அவர்களுக்கு
உறக்கபுன்னகையை உதிர்த்துவிட்டு
கட்டி அணைத்துகொண்டது பொம்மையை

பொம்மையாதலின் வழிகள் யாதென
அறியாமல் விழித்தனர் கடவுளர்!!



2 comments: