Sunday 23 November 2014

சூனியமான பெருவெளி

விழியிழந்த பாவையாய்
சூழ்ந்து கிடக்கின்றேன்
இருள்வெளியில்

நீளும் கருமையை
எவ்வொளி கொண்டும்
துளைக்கமுடிவவில்லை

உன் ஒற்றை விழி வழி
பார்த்த இப்பெருவெளி
இருள் நிறைந்த சூனியமாகிற்று

தடுமாறும் மனதிற்கு
தட்டுப்படும் உன் குணம்கொண்டு
சொல்லித்தருகிறேன்
மீட்சிப் பாதையின் தீரா வழிதனை

தேடலின் தொலைவிலும்
கைக்கு எட்டா கதவினாலும்
பழகிப்போனது
உண்பதும் உறைவதும்
அடரிருளில்

எங்கெங்கும்
வெளிச்சம் இப்போது
எனைச்சுற்றிய இருளாய்...


No comments:

Post a Comment