Sunday 23 November 2014

தொலையும் அன்பின் அடையாளங்கள்

வலியில் துடிகின்றேன்
உன் வார்த்தை அம்பு தைத்த ரணங்களை வருடியபடி

உனக்கும் வலித்திருக்கும்
என் செயல்களென அறிவேன்

என் வார்த்தைகள் அனைத்த
அலைபேசி யில்
நிரம்பிக்கொண்டிருகிறது
உன் மற்ற செயல்களும்
மருந்தான என் சொற்களும்

மனமிறுக்கும் பிடிவாத முனைப்பால்
மீட்டெடுக்க மறுக்கிறோம்
அலைபேசியையும்
நம் அன்பின் அடையாளங்களையும்...

No comments:

Post a Comment