Sunday 23 November 2014

மௌன சாட்சி

சிறகொடிந்த பட்டாம்பூச்சி ஒன்று
அனல் தகிக்கும் சாலை நடுவில்
துடித்து உயிர் விடுவதை ..

விரைந்து கடக்கும் ஊர்திகளுக்கு பயந்து
சாலையோரம் மௌன சாட்சியாய் பார்த்த அன்று 

மீசை முறுக்கி சிரித்துக்கொண்டே
கனவில் வந்து போனார் பாரதி

No comments:

Post a Comment