Sunday 23 November 2014

அன்னை துதி



பிரபஞ்சத்தின் கருனை வடிவான
சத்திய ஒளிப்பிழம்பே போற்றி!!

இருளென சூழ்ந்திடும் மனக்குழப்பம் நீக்கி
தெளிவு தரும் திவ்ய சாநித்யமே போற்றி!!

நல்லோர்கள் வழி நயவஞ்சகர்களை

அடையாளம் காட்டும் அன்னையெனும் திருவே போற்றி!!

வலிமிகுந்த நேரங்களில் வழி இது தானென நெறிபடுத்தும்
நிர்மல தேவி போற்றி!!

ஸ்துல உடல் நீத்து பொன்னொளிப் பிழம்பாய்
"மதர்" என அழைக்கும் மறுநொடி ஏதொ ஒரு வடிவில்
நானிருக்கிறேன் என்று மனஅமைதி தரும்
ஆனந்தக்கடலே போற்றி!! போற்றி!!

ஓம் ஆனந்தமயி!! சைதண்ய மயி!! சத்யமயி பரமே!


No comments:

Post a Comment