Tuesday 2 December 2014

தூரிகை சிந்திய எண்ணத் துளிகள்-2



அமைதியின் அழகில் லயிக்கும் மனதிற்கு
ஆர்ப்பாட்டங்கள் அர்த்தமற்றே தெரிகிறது

***************************************************

ஓடும் நதி தனக்கு மட்டுமே சொந்தமென
அதன் கரையோர மரம் நினைத்தல் அர்த்தமற்றது.

‪#‎சில_மனங்களும்_சில_மனிதர்களும்‬

***********************************************

நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளமுடியாமல்
கண்டும் காணாதுபோல கடந்துவிடுகிறோம்
சுவடில்லாமல்

************************************************

சில நிகழ்வுகளை மறக்கவேண்டும்
என நினைத்துக்கொண்டே
நம்மையறியாமல் நினைவு அடுக்குளின்
மேலெழுப்பி விடுகிறோம்.

****************************************************

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள் தான்
பெயர் கொண்டதா அன்பென்று !!

**********************************************
வெளிச்சம்
பயத்தை ஏற்படுத்த
தொடங்கும் வரை
பாதைகள் எளிமையாகவே இருந்தன
இருளின் மீதான அனுமானங்களும்

*****************************************
ஈடுபாடில்லாமல்
செய்ய முற்படும் செயல்களுக்கு
காலத்தை காரணம் காட்டி
தப்பித்துக்கொள்ளவே விழைகிறது மனம்

*******************************************

புறக்கணித்தலைப் போலொரு
கொடிய வன்முறை
வேறொன்றும் இல்லை...
‪#‎அன்பு_செய்வோம்‬

***************************************

வலியில் துடிக்கும்
உயிரின் மதிப்பு
பொருள் தேடலில்…
பொசுங்கிப் போகிறது

**************************************

எதிர்பார்ப்புகளும்,
இயலாமையும்
ஒரே கோட்டில் நிற்கும்பொழுது
வாழ்க்கை கசந்து விடுகின்றது


No comments:

Post a Comment