Friday 12 December 2014

அவஸ்தைகளாகும் அதீதங்கள்

விடைகள் தேடி
அலையும் மனதினில்
யாரோ வினா விதைத்துச் சென்றுள்ளனர்.

ஏன் ? ஏன் ? ஏனென
மனக்காடெங்கும் கேள்வி மரங்களாய்
செழித்து கிளைத்து நிற்கின்றது.

தெளியும் மன ஓடையில்
வீசியஎரிகற்களாய்
இப்போதுன் வார்த்தைகள் விழுந்து சலசலக்கிறது

அதீத உனதன்பை எங்கே தவறவிட்டோமென
கனவிலும் உன் நினைவு சுமந்து உறங்குகிறேன்

வலிகள் விழிகளில் கரைதட்டி
அதீதங்கள் அவஸ்தைகளாய் கரைகின்றது

கனக்கும் மனதிற்கும்
வலிகளின் நீட்சிகளுக்கும்
யாதுரைப்பேன்
உன் உள்ளம் நெருங்குதல் சாத்தியமில்லையென..

1 comment:

  1. வணக்கம்
    சகோதரி
    உண்மையான வரிகள் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete