Thursday 4 December 2014

தீபத் திருநாள்



நல எண்ணம் சூழ் உலகே
எண்ணெய் நிறை தளும்பும் ஆழியாய்
மெய்யே திரியாய்
வாழும் உயிர்களெல்லாம்
ஒளிரும் சுடராய்
புவியெங்கும் ஒளிர
நானும் ஏற்றுவோம்
நாளும் நாளும் ...
அன்பெனும் சுடரை!!
அகங்கார அரக்கன் அழித்து
அறியாமை இருள்விலக்கி
ஜோதியாய் , ஒற்றுமைத் தீபத்தை
நாமும் ஏற்றுவோம்
எந்நாளும் நன்னாளாய் !!


2 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
    இனிய கார்த்திகைதீபத் திருநாள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன் சார்

    ReplyDelete