Tuesday 2 December 2014

அழியா சுவடுகள்...



எப்படி தேடிடினும் கிடைத்திடா சில சுவடுகள்...

அடைத்திட்ட பூங்காவின் ஊஞ்சலிகளில்
மழலைகள் ஆடிவிட்டு போனதற்கோ

காய்ந்த சருகுகளின் மேல்
சற்றுமுன் ஒரு இலை உதிர்ந்தற்கோ

அடுக்கி கிடக்கும் புத்தகத்தினுள்
மயிலிறகு தேடிய அடையாளமோ

பூட்டிய மாடமாளிகைகளெல்லாம் முன்னெப்போதோ
விசாலமாய் திறக்கப்பட்டிருந்ததற்கோ

எந்த தடங்களும் இருப்பதில்லை
எனினும் அழிக்கவியலாமல் தேங்கி விடுகின்றன
சில நினைவுகள்
சில உணர்வுகள்
சில தேதிகள்...


No comments:

Post a Comment