Friday 19 December 2014

மீண்டும் ஒரு கருவறை வாசம்

ஈரைந்து மாதங்கள்
இருள்சூழ் கருவறை சொர்க்கமாய்

பழி பாவங்கள் ஏதுமற்று
பொய்மை சூழ்ச்சி அறியாமல்
நிம்மதியுறக்கம்கொண்டேனடி

வெளிச்ச பெருவெளி பிறப்பெடுக்க

அன்போடு வஞ்சனைகளும் சேர்ந்தே சூழ
பிரித்தறியத்தெரியா பேதையானேன்

அலைக்கழிந்த மனம் அமைதியுறங்க
மீண்டும்ஒரு கருவறை சேர வரம் தா அம்மா.


No comments:

Post a Comment