Friday 19 December 2014

பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா !!


தம்பி மனைவி (ஸ்ரீயின் அம்மா) பக்கத்தில் இருக்கும் கடையில் போய் ஏதோ சாமான் வங்கி வர சொல்லி இருக்கா ரெண்டு மூணு நாட்களாக...
 
கடைக்காரரும் சில்லறை காசு இல்லாமல் மீதம் தர வேண்டிய ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் சில்லறைக்கு "ஹால்ஸ் " மிட்டாய் தந்து அனுப்பியிருக்கார்...

இன்று காலையில் மீண்டும் ஸ்ரீயை கடைக்கு அனுப்பி இருக்கா அவன் அம்மா... இவன் கடந்த ரெண்டு மூணு நாள் குடுத்த "ஹால்ஸ்" எல்லாத்தையும் கையில் எடுத்துட்டு கடைக்கு போயிருக்கான் ...

கடைகாரர் சாமான்களை குடுத்துவிட்டு தம்பி சில்லறை ஐந்து ரூபாய் இருக்கா என்று கேட்க ... இவனோ இருக்கு என்று ஐந்து ஹால்ஸ் மிட்டாய்களை எடுத்து இந்தாங்க என்று குடுக்க ...
என்ன இது என்று கடைக் காரர் கேட்க .... நீங்களும் சில்லறை இல்லாமல் தானே இந்த மிட்டாய்களை தாறீங்க , என் கிட்டயும் சில்லறை இல்ல அதனால நானும் நீங்க குடுத்த ஹால்ஸ்சயே உங்களுக்கு தாரேன் என்று சொல்ல....
கடைகாரர் உன்ன எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா என்று சொல்ல.... இவனும் உங்கள எப்படி கடவுள் செய்தாங்களோ அதே போல என்னையும் செய்து அனுப்பிருக்காங்க என்று பதில் சொல்லிட்டு வந்துவிட்டான்
ஹஹஹா....


1 comment:

  1. காலத்துக்கேத்த பையன்....

    ReplyDelete