Monday 1 December 2014

வரமாய் வேண்டுகிறேன்...


அலையாடும் எண்ணங்கள் அமைதியுறங்க
உன்தோள்தனை தேடுகிறேன் சிறுபிள்ளையாய்
சாய்ந்திடும் வரமொன்றை நீஅளித்தால்
ஜென்மசாபங்கள் கரைந்திடும் அந்நொடியே!!

சாரலென விழிமழையும் ஏக்கப்பெருமூச்சோடு வர
உன்மடிகடல்கலந்திட இடம்கொடுத்தால்
என்விழியோடு இமைதழுவி உறக்கம் கொள்வேன்.

அனல்தகிக்கும் பூக்காடாய் மனம் கனன்றிருக்க
பனிபொழிவாய் பார்வைவீசி
வார்த்தைகளால் வான்கிழித்தால்
குளிர்நிலவாய் குடிபெறுவேன்.

படைத்தவன் கொண்ட ஆணையெல்லாம்
அளிப்பவனாய் நீ அவதரித்தால்

ஆசைகொள்ளும் பருவம் கழித்து
அறிவு சொல்லும் சிந்தை கழித்து
எதற்கும் துவளும் மனம் கழித்து
பேதையாவேன் அன்றி பேரிளம்பெண்ணாவேன்!!


2 comments:

  1. அருமையான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. நன்றி . தொடர்ந்து வாசித்து கருத்து தெரிவிக்கவும்

    ReplyDelete